புதுச்சேரி: புதுச்சேரியில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் வந்த இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகம், வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள் அறை, மற்றும் நீதிமன்றங்கள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனையிட்டனர்.
தீவிரமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் எந்த ஒரு வெடிபொருளும் சிக்கவில்லை. இதனால் வழக்கமான வெடிகுண்டு புரளி என போலீசார் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்தில் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாய் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. ஆளுநர் மாளிகை, முதல் அமைச்சர் இல்லம், பிரெஞ்சு தூதரகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் நரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரால் துப்புதுலக்க முடியவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}