சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி வியாழக்கிழமை வருவதால், அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்ற தமிழக அரசு வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையை சரிசெய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி அன்று வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இது மட்டும் இன்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் பதவிகளில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை பேனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 வரை போனஸ் வழங்கப்பட உள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டுதலில் டாஸ்மாக் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. 2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் கிட்டத்தட்ட ரூ. 46,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது 2003-04 ஆண்டு காலகட்டத்தில் வெறும் ரூ. 3,600 கோடியாக மட்டுமே இருந்தது என்பது நினைவிருக்கலாம். தனியாரிடம் இருந்த மது பார்கள், மதுக் கடைகள், மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுடமை ஆக்கப்பட்டன. அதிலிருந்து அரசுக்கு டாஸ்மாக் மூலம் பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க ஆரம்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. மதுரை உள்பட 9 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம்!
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் கைது!
4 மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு : பாஜகவுக்குப் பின்னடைவு.. துளிர்த்த ஆம் ஆத்மி, காங்கிரஸ்!
சூர்யா 45 படத்தின் கதை என்னவா இருக்கும்.. கருப்பு டைட்டிலை இப்போதே கொண்டாடும் ரசிகர்கள்!
ரூ. 100 கோடியைத் தாண்ட தடுமாறும் தக்லைப்.. கர்நாடக குழப்பத்தால் ஏற்பட்ட ரூ. 30 கோடி நஷ்டம்!
என்னாது... 2026ல் மேற்குவங்க முதல்வர் ஆகப் போகிறாரா செளரவ் கங்குலியா?
வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்
தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!
பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு
{{comments.comment}}