டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு போனஸ் .. அறிவித்தது தமிழக அரசு!

Oct 21, 2024,04:43 PM IST

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு  தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி வியாழக்கிழமை வருவதால், அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்ற தமிழக அரசு வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 


இந்த விடுமுறையை சரிசெய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி அன்று வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.




இது மட்டும் இன்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. 


சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் பதவிகளில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.


தமிழ் அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை பேனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 வரை போனஸ் வழங்கப்பட உள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டுதலில் டாஸ்மாக் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது.  2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் கிட்டத்தட்ட ரூ. 46,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது 2003-04 ஆண்டு காலகட்டத்தில் வெறும் ரூ. 3,600 கோடியாக மட்டுமே இருந்தது என்பது நினைவிருக்கலாம். தனியாரிடம் இருந்த மது பார்கள், மதுக் கடைகள், மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுடமை ஆக்கப்பட்டன. அதிலிருந்து அரசுக்கு டாஸ்மாக் மூலம் பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க ஆரம்பித்தது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ

news

திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

news

No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை

news

பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?

news

அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!

news

மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!

news

மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்

news

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்‌!

அதிகம் பார்க்கும் செய்திகள்