பேசாம நீங்க அங்க போய்ருங்க.. சென்னை சிறுமியைக் கடித்த.. 2 நாய்களும் மதுரைக்கு இடமாற்றம்!

May 07, 2024,05:19 PM IST
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை கடித்த ராட்வெய்லர் நாய்கள் இரண்டும், தற்போது மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. நாய் உரிமையாளர் புகழேந்தியின் மகன் வீட்டுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா  காவலாளராக இருப்பவர் ரகு. இவர் தனது மகள், மனைவியுடன் அதே பூங்காவில் குடியிருக்கிறார். சம்பவத்தன்று புகழேந்தி என்பவரின் இரண்டு ராட்வெய்லர் நாய்களும் அங்கு வந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த ரகுவின் மகள் மீது பாய்ந்து கடித்து விட்டன. அதைத் தடுக்க முயன்ற ரகுவின் மனைவியையும் அவை கடித்தன. நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் புகழேந்தி அங்கிருந்து ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டி இருவரையும் மீட்டனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புகழேந்தியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.  நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட மூவரும் பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 



சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளர் புகழேந்திக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டஸ் அனுப்பியது. நோட்டீசில், நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி  இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது 2 நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு புகழேந்தி இடம் மாற்றம்  செய்துள்ளார். அங்கு இந்த நாய்களை அவரே கொண்டு போய் விடுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்