பேசாம நீங்க அங்க போய்ருங்க.. சென்னை சிறுமியைக் கடித்த.. 2 நாய்களும் மதுரைக்கு இடமாற்றம்!

May 07, 2024,05:19 PM IST
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை கடித்த ராட்வெய்லர் நாய்கள் இரண்டும், தற்போது மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. நாய் உரிமையாளர் புகழேந்தியின் மகன் வீட்டுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா  காவலாளராக இருப்பவர் ரகு. இவர் தனது மகள், மனைவியுடன் அதே பூங்காவில் குடியிருக்கிறார். சம்பவத்தன்று புகழேந்தி என்பவரின் இரண்டு ராட்வெய்லர் நாய்களும் அங்கு வந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த ரகுவின் மகள் மீது பாய்ந்து கடித்து விட்டன. அதைத் தடுக்க முயன்ற ரகுவின் மனைவியையும் அவை கடித்தன. நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் புகழேந்தி அங்கிருந்து ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டி இருவரையும் மீட்டனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புகழேந்தியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.  நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட மூவரும் பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 



சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளர் புகழேந்திக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டஸ் அனுப்பியது. நோட்டீசில், நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி  இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது 2 நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு புகழேந்தி இடம் மாற்றம்  செய்துள்ளார். அங்கு இந்த நாய்களை அவரே கொண்டு போய் விடுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்