ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!

Jul 28, 2026,10:25 AM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


ஆடியிலே காத்தடிக்க 

அழகுராணி கூத்தடிக்க


ஓடி வாரா 

ஆடி வாரா

ஒய்யாரமாக


கூடையிலே பூ எடுத்தா

தோராயமாக


சின்னச் சின்ன 

பூ எடுத்து


சிறப்புடனே பூ

சரம் தொடுத்து




கூந்தலிலே சூடிக் கிட்டு 

ஆடியும் வந்தாள்


கோலவிழி பார்வையிலே 

ஜாடையும் தந்தாள்


மேடையிலே ஆடுவதா 

ஓடையிலே நீந்துவதா


கோடை வெயிலில தான் 

வேகுதடி மேனியுமே


தாகம் எடுக்குதடி 

மோகம் வந்து தடுக்குதடி


மோகினியே நீவந்து மோதுகிறே என்ன சொல்ல


சேதி சொல்ல 

நேரமில்லை

சாதி சனம் 

சேரவில்லை


ஆடி வெள்ளியிலே 

ஆலயம் திறந்திருக்கு


சாமியைக் கும்பிடுவோம் 

சந்தோசம் ஆகிடுவோம்


ஆவணி பிறக்கட்டும் 

அதுவரைக்கும் காத்திருப்போம்


மணமேடை ஏறிடுவோம் 

மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்