வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!

Jul 28, 2026,10:12 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


ஆறாத வேதனைகளும் மாறாத சோதனைகளாகிட 

வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும், 


மலராத வாழ்வும் புலராத பொழுதுகளாகிட

மங்காத ஒளியும் கலையாத இருளாக்கிடும், 


அயராத உழைப்பும் அணையாத விளக்காகிட 

உறையாத உதிரமும் மெருகேறாத மேனியாகிடும், 


சுடாத சோறும் விடாத வறுமையுமாகிட

 படாத பாடும் அறியாத அனுபவமாக்கிடும்,


கரையாத கவலைகளும் குறையாத குழப்பங்களுமாகிட

முதிராத வயதும் உதிராத பூக்களாகிடும்,


வருடாத இன்பங்களும் நெகிழாத இதயங்களாகிட

வாடாத முகங்களும் ஆடாத ஆழியாகிடும்,




மீளாத சோகங்களும் மீட்டாத வீணையாகிட 

வளராத வம்புகளும் உள்ளாறாத தீயாகிடும்,


செவி சேராத வார்த்தைகளும் விழிக்காணாத கதைகளாகிட 

தளராத தன்னம்பிக்கையும் வளராத வாழ்க்கையாக்கிடும்,


தெளிவில்லாத சிந்தனையும் ஓய்வில்லாத பிரச்சனையுமாகிட

வானுயராத குடும்பமும் தானுயராத நிழலாகிடும்,


வளையாத பாதைகளும் வாய்மொழியாத ரணங்களாகிட 

உருகாத உள்ளமும் கல்லூறாத நீராகிடும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

news

வெயில்!

news

ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!

news

வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்