கேரளாவை உலுக்கும் மூளையை திண்ணும் அமீபா.. 3 பேர் பலி.. மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு

Jul 06, 2024,05:24 PM IST

கோழிக்கோடு: கேரளாவில், மூளையை  திண்ணும் ஆமீபாவால், ஏரி மற்றும் குளங்களில் குளித்த 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 4வது சிறுவன் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.


கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த மூவரும் ஆறு, குளங்களில் குளிக்கும் போது அவர்களது மூக்கின் வழியாக சென்ற அமீபாவால் தான் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை திசுக்களை அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இறந்து போவதாக அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.




மூளையைத் தின்னும் இந்த அமீபா ஒரு செல் உயிரின வகையைச் சேர்ந்ததாகும். இவை வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை ஆகும். நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள், ஏரி, ஆறு ஆகியவைகளில் தான் இந்த அமீபாக்கள் அதிகம் காணப்படுகின்றன. இது போன்ற இடங்களில் குளிக்கும் போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது. இது மூக்கின் வழியாக சென்று மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.


பின்னர் இந்த தொற்று ஏற்பட்டவர்கள் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். குளோரின் கலக்கப்படாத நீர்நிலைகளில் இந்த அமீபா காணப்படுகிறதாம். பொதுவாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைானவர்களே இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இறந்துவிடுகின்றனர் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் சிடிசி கூறுகிறது.


இந்த அமீபா பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுமாம். அமீபா வேகமாக வளரும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 1 முதல் 18 நாட்களுக்குள் இறந்து விடுகின்றனர்களாம். பொதுவாகத் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணம் எற்படுகிறது என்று சிடிசி தெரிவித்துள்ளது. இது உடலில் வளரும் போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு, மாயத்தோற்றம் ஆகியவை ஏற்படுவதாக சிடிசி தெரிவித்துள்ளது. இந்த தொற்று அரிதாக ஏற்படுவதால், இந்த பாதிப்பு ஏற்பட்ட நபர் இறந்த பிறகு தான் இது குறித்து அறிய முடிவதாகவும் சிடிசி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்