ஹைதராபாத்: தேர்தல் வரும் மாநிலங்களில் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒடுக்க "ஈடி"யை (அமலாக்கப் பிரிவு) அனுப்பி விடுகிறது பாஜக.. இதுதான் அவர்கள் கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தும் நடைமுறை.. ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா.
டெல்லி சுங்கவரி திட்ட மோசடி வழக்கில் கவிதாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு வருமாறு டெல்லி அமலாக்கப் பிரிவு கவிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தான் ஆஜராகவிருப்பதாக கவிதா தெரிவித்துள்ளார்.
அமலாக்கப் பிரிவு சம்மன் குறித்து அவர் கூறுகையில், இந்த சம்மனைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவு, சிபிஐ போன்றவற்றைப் பயன்படுத்துவதுதான் பாஜகவின் ஸ்டைல்.
அதிலும் தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களில் அங்குள்ள பலமான கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவை ஏவி விடுகிறது பாஜக. பிரச்சாரத்திற்கு மோடி வருவதற்கு முன்பாகவே அந்த மாநிலங்களுக்கு ஈடி வந்து விடுகிறது. தனது சித்தாந்தத்திற்கு ஒத்துவராத அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஒடுக்க ஈடியைத்தான் பயன்படுத்துகிறது பாஜக என்று குற்றம் சாட்டினார் அவர்.
கவிதா தற்போது எம்எல்சியாக உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் - டிசம்பர் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதலும் நிலவுகிறது. அவ்வப்போது இரு கட்சியினருக்கும் இடையே அடிதடிகளும் நடைபெறுகிறது. டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் பலர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குகளும் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில்தான் கவிதா ரூபத்தில் கே.சி.ஆருக்கு செக் வைக்கப்படவுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}