ஹைதராபாத்: தேர்தல் வரும் மாநிலங்களில் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒடுக்க "ஈடி"யை (அமலாக்கப் பிரிவு) அனுப்பி விடுகிறது பாஜக.. இதுதான் அவர்கள் கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தும் நடைமுறை.. ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா.
டெல்லி சுங்கவரி திட்ட மோசடி வழக்கில் கவிதாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு வருமாறு டெல்லி அமலாக்கப் பிரிவு கவிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தான் ஆஜராகவிருப்பதாக கவிதா தெரிவித்துள்ளார்.
அமலாக்கப் பிரிவு சம்மன் குறித்து அவர் கூறுகையில், இந்த சம்மனைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவு, சிபிஐ போன்றவற்றைப் பயன்படுத்துவதுதான் பாஜகவின் ஸ்டைல்.
அதிலும் தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களில் அங்குள்ள பலமான கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவை ஏவி விடுகிறது பாஜக. பிரச்சாரத்திற்கு மோடி வருவதற்கு முன்பாகவே அந்த மாநிலங்களுக்கு ஈடி வந்து விடுகிறது. தனது சித்தாந்தத்திற்கு ஒத்துவராத அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஒடுக்க ஈடியைத்தான் பயன்படுத்துகிறது பாஜக என்று குற்றம் சாட்டினார் அவர்.
கவிதா தற்போது எம்எல்சியாக உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் - டிசம்பர் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதலும் நிலவுகிறது. அவ்வப்போது இரு கட்சியினருக்கும் இடையே அடிதடிகளும் நடைபெறுகிறது. டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் பலர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குகளும் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில்தான் கவிதா ரூபத்தில் கே.சி.ஆருக்கு செக் வைக்கப்படவுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}