பகுஜன் சமாஜ் கட்சியின்.. ஒருங்கிணைப்பாளராக.. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமனம்‌!

Jul 22, 2024,07:00 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது 

மனைவி பொற்கொடிக்கு அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய நண்பர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகிறது. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சேரந்தவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்