ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை.. சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.. மாயாவதி கோரிக்கை

Jul 07, 2024,07:11 PM IST

சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லக்னோவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் மாயாவதி. பெரம்பூரில் மாநகராட்சிப்  பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாயாவதி அவரது தலையில் கையை வைத்து ஆறுதல் சொன்னார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.




பின்னர் மாயாவதி பேசும்போது, ஆம்ஸ்ட்ராங் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வளருவதற்கு கடுமையாக பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.


தமிழ்நாடு அரசுக்கு எனது கோரிக்கை என்னவென்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள். குறிப்பாக முதல்வவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்.  சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முதல்வர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர் சுதந்திரமாக நடமாடத் தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும். 


அரசு சீரியஸாக இருந்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். இப்போதும் கூட குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. அவர்களாக வந்துதான் சரணடைந்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றார் மாயாவதி.


சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்