சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லக்னோவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் மாயாவதி. பெரம்பூரில் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாயாவதி அவரது தலையில் கையை வைத்து ஆறுதல் சொன்னார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மாயாவதி பேசும்போது, ஆம்ஸ்ட்ராங் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வளருவதற்கு கடுமையாக பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.
தமிழ்நாடு அரசுக்கு எனது கோரிக்கை என்னவென்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள். குறிப்பாக முதல்வவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முதல்வர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர் சுதந்திரமாக நடமாடத் தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அரசு சீரியஸாக இருந்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். இப்போதும் கூட குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. அவர்களாக வந்துதான் சரணடைந்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றார் மாயாவதி.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்