சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லக்னோவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் மாயாவதி. பெரம்பூரில் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாயாவதி அவரது தலையில் கையை வைத்து ஆறுதல் சொன்னார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.

பின்னர் மாயாவதி பேசும்போது, ஆம்ஸ்ட்ராங் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வளருவதற்கு கடுமையாக பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.
தமிழ்நாடு அரசுக்கு எனது கோரிக்கை என்னவென்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள். குறிப்பாக முதல்வவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முதல்வர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர் சுதந்திரமாக நடமாடத் தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அரசு சீரியஸாக இருந்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்கலாம். இப்போதும் கூட குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. அவர்களாக வந்துதான் சரணடைந்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றார் மாயாவதி.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}