டில்லி : மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கி உள்ளது. இன்று பிற்பகலில் 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜனவரி 31) துவங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 10ம் தேதி துவங்கி ஏப்ரல் 4 ம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி உள்ளது. ஜனாதிபதி உரையை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய உள்ளார்.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 01ம் தேதியான நாளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் எட்டாவது மத்திய பட்ஜெட் ஆகும். பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இது தொடர்பாி பல எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு துறையிலும் இருந்தாலும் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்பது தான் உச்சபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளை பட்ஜெட் தாக்கலுடன் அவை ஒத்திவைக்கப்படும். அதற்கு பிறகு பிப்ரவரி 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான விவாதமும். ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கு பிறகு மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறும். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதா உள்ளிட்ட மொத்தம் 16 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்ட தொடரில் வங்கி சட்டங்களில் திருத்தம் செய்வது, ரயில்வே சட்டங்களில் திருத்தம் செய்வது, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் மாற்றம் செய்வது, எண்ணெய் துறையில் ஒழுங்குளை மற்றும் வளர்ச்சியை கொண்டு வருவது உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மொத்தம் 27 அமர்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
{{comments.comment}}