டேய் சரவணா எங்கடா போன.. புதுச்சேரி தவெக நிர்வாகி உடலைப் பார்த்து...கதறியழுத புஸ்ஸி ஆனந்த்

Oct 22, 2024,12:25 PM IST

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சரவணன் உடலை பார்த்து கதறி அழுதார்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியிருந்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் கடந்த சில நாட்களாக விக்கிவாண்டியில் தங்கி மாநாட்டு பணிகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள வீட்டிற்குத் திரும்பியுள்ளார் சரவணன். தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 


இதனையறிந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த சரவணன் வீட்டிற்கு நேரில் சென்று கதறி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலில் பரவி வருகிறது. டேய் சரவணா எங்கடா போன என்று கேட்டு கதறி அழுதுள்ளார் புஸ்ஸி ஆனந்த். சரவணனும், ஆனந்த்தும் நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 


இவரது இழப்பு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக புதுச்சேரி நிர்வாகி சரவணன் மறைவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.


அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

news

தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்

news

ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!

news

வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!

அதிகம் பார்க்கும் செய்திகள்