"2 நிமிஷ ஆசை.. அதை அடக்க முடியாதா".. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சர்ச்சை கருத்து!

Oct 20, 2023,01:34 PM IST

கொல்கத்தா: பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற பெஞ்ச், பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை எழுப்பியுள்ளன.


கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு இளைஞர் அப்பீல் மனு செய்திருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு அது. அந்த மனுவை நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஸ், பார்த்தா சாரதி சென் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.




விசாரணையின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில அறிவுரைகளை நீதிபதிகள் கூறினர். அவர்கள் கூறியதாவது:


இளம் வயதில் செக்ஸ் உறவுகள் தொடர்பாக எழும் சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க பள்ளிகளில் செக்ஸ் கல்வியை விரிவாக நடத்த வேண்டும்.


வளர் இளம் வயதில் செக்ஸ் என்பது இயல்பானதுதான்.  ஆனால் செக்ஸ் உணர்வுகள் எழுவதை கட்டுப்படுத்த வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் நடந்து கொள்வதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.


பெண்கள் தங்களது செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்திற்காக அதை கட்டுப்படுத்தாமல் இருக்கக் கூடாது. சமூகத்தின் பார்வையில் பெண்களைத்தான் குறை சொல்வார்கள். இதைத் தவிர்க்க, அந்த இரண்டு நிமிடத்தில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை மனதில் கொண்டு உங்களை இழந்து விடக் கூடாது.


தங்களது உடம்பையும், கண்ணியத்தையும், சுய மதிப்பையும் பெண்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதன் மீதான உரிமையை விட்டுக் கொடுத்து விடக் கூடாது.


பெண்களின் கண்ணியத்தை ஆண்கள் மதிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தங்களது மனங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் சுய மதிப்பு, அவரது உடல் மீதான உரிமை, தனிப்பட்ட அந்தரங்கம் ஆகியவற்றை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


நீதிபதிகளின் கருத்துக்கள்  தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்