சியாச்சின் பனிச் சிகரத்தின் உச்சியில்.. பாதுகாப்புப் பணியில்.. முதல் பெண் ராணுவ அதிகாரி!

Jan 04, 2023,08:50 AM IST
ஸ்ரீநகர்:  சியாச்சின் பனிச்சிகரத்தின் உச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார் கேப்டன் ஷிவா செளகான். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள முதல் இந்திய பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என்ற பெயர் பெற்றது சியாச்சின் பனிச்சிகரம். இந்த சிகரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது மோதிக் கொண்டு வந்தன. தற்போது இந்த சிகரம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 



இந்த பகுதியில்தான் தற்போது பெண் ராணுவ அதிகாரியாக ஷிவா தனது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். சியாச்சின் பனிச் சிகரத்தில் 15,600 அடி உயரத்தில் இருக்கும் குமார் போஸ்ட் பகுதியில்தான் அவர் பணியில் ஈடுபட்டுள்ளார்.  3 மாதங்கள் அவர் இங்கு பணியில் இருப்பார். இதற்காக அவர் தீவிர பயிற்சியும் பெற்று அதன் பிறகே இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு போர்த்தடவாள பொறியியில் சாதனங்களைக் கொண்டு செல்லும் படையணியின் கேப்டனாக ஷிவா செயல்படுகிறார்.  ஆண் அதிகாரிகளுடன் இணைந்து சியாச்சின் போர்க்கள பள்ளியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு அதில் தேறிய பிறகே ஷிவாவுக்கு சியாச்சின் பணி கிடைத்தது. இந்த பயிற்சிகள் அனைத்துமே பனியை அடிப்படையாக வைத்து நடக்கும். கடுமையானவை, கஷ்டமானதும் கூட.  அதில் தேறித்தான் தற்போது புதிய கெளரவத்தைப் பெற்றுள்ளார் ஷிவா செளகான்.

முன்பு அதிகபட்சமாக சியாச்சின் தரை முகாமில்தான் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தரையிலிருந்து 9000 அடி உயரத்தில் உள்ளது.  அதற்கு மேல் உள்ள முகாம்களுக்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. அதைத்தான் தற்போது தகர்த்துள்ளார் ஷிவா செளகான்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்