சென்னை: அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினார் என தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் அதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதை மீறுவோர் மீது வழக்குகள் பாய்ந்து வருகின்றன.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் நட்சத்திர வேட்பாளரான ஜெயவர்தனை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக பறக்கும் படையினருக்கு புகார்கள் வந்தன. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் மீது தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}