லேப்டாப், கம்யூட்டர்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் ?

Aug 04, 2023,04:04 PM IST
டெல்லி : லேப்டாப், கம்யூட்டர், ஆல் இன் ஒன் பர்சனல் கம்யூட்டர், அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர், சர்வர்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் சீனா மற்றும் கொரியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. ஏதாவது ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் லேப்டாப், கம்ப்யூட்டர் விற்பனை செய்ய வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். 



வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏழு பிரிவுகளின் கீழ்  HSN code 8471 கொண்ட எலக்ட்ரானிக் கேட்ஜட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. Harmonised System of Nomenclature (HSN) code என்பது டேட்டா சேமிப்பு மிஷின்களை குறிப்பதாகும். டேட்டா சேகரிக்கும் கருவிகளை மட்டும் வெளிநாட்டில் இருந்து இ��க்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட லேப்டாப், டேப்ளட் உள்ளிட்டவைகளுக்கு விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலக்கு அளிக்கப்பட்ட கருவிகளை இறக்குமதி செய்வதாக இருந்தால் போஸ்ட் அல்லது கூரியர் மூலம் மட்டுமே பெற வேண்டும். அவற்றிற்கு இறக்குமதி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படும். டேட்டாக்களை பாதுகாப்பதற்காகவும், இந்த கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் உள்நாட்டு ஐடி நிறுவனங்கள் லேப்டாப், கம்யூட்டர், டேப்லட் ஆகியவற்றை வெளிநாட்டு தரத்திற்கு இணையாக உற்பத்தி செய்ய துவங்குவதற்கு முன் இந்த பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்