இன்டர்போல் அமைப்பு போல.. பாரத் போல்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் அமித் ஷா

Jan 07, 2025,03:44 PM IST

டெல்லி: இன்டர்போல் போலீஸ் அமைப்பு போன்று புதிய பாரத் போல் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.


1923 ஆம் ஆண்டு சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக  உருவாக்கப்பட்ட அமைப்புதான் இன்டர்போல் அமைப்பு. அதாவது கடுமையான குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தப்பித்து தங்கி இருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள்,  ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவர்கள், சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கியவர்கள் போன்றோர் குறித்து, விசாரணை மேற்கொள்வதற்காக, கைது செய்வதற்காக உருவாக்கப்பட்ட   அமைப்புதான் இந்த இன்டர்போல்.




இன்டர்போல் மூலம் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குற்றவாளிகள் குறித்து சுற்றறிக்கைகள் அனுப்பப்படும். குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப  சிவப்பு, மஞ்சள் அலர்ட்கள் வெளியிடப்படும்.  இன்டர்போல் அமைப்பில் 184 உலக நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வமைப்பானது பல்வேறு நாடுகளின் காவல்துறைக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் லியான் நகரில் உள்ளது. இதுதவிர சிங்கப்பூர் மற்றும் பியூனஸ் அயர்ஸ் நகரங்களிலும் இதன் அலுவலகங்கள் உள்ளன.


இந்த நிலையில் இன்டர்போல் போல பாரத் போல் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் குறித்து பாரத் போல் மூலமாக, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளவும், குற்றவாளிகளை பிடிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்புதான் பாரத் போல்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதை அறிமுகப்படுத்தினார். ஆன்லைன் மோசடி, பண மோசடி , போதைபொருள் கடத்தல், மனித உறுப்புகள் கடத்தல், விலங்குகள் கடத்துதல், பெண்கள் சம்பந்தமான வழக்குகள் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபடும்  குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேவைப்படும் உதவிகளையும் ஒத்துழைப்பையும் பெற்று விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகளை முடிக்க பாரத் போல் தளம் அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்