இன்டர்போல் அமைப்பு போல.. பாரத் போல்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் அமித் ஷா

Jan 07, 2025,03:44 PM IST

டெல்லி: இன்டர்போல் போலீஸ் அமைப்பு போன்று புதிய பாரத் போல் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.


1923 ஆம் ஆண்டு சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக  உருவாக்கப்பட்ட அமைப்புதான் இன்டர்போல் அமைப்பு. அதாவது கடுமையான குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தப்பித்து தங்கி இருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள்,  ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவர்கள், சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கியவர்கள் போன்றோர் குறித்து, விசாரணை மேற்கொள்வதற்காக, கைது செய்வதற்காக உருவாக்கப்பட்ட   அமைப்புதான் இந்த இன்டர்போல்.




இன்டர்போல் மூலம் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குற்றவாளிகள் குறித்து சுற்றறிக்கைகள் அனுப்பப்படும். குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப  சிவப்பு, மஞ்சள் அலர்ட்கள் வெளியிடப்படும்.  இன்டர்போல் அமைப்பில் 184 உலக நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வமைப்பானது பல்வேறு நாடுகளின் காவல்துறைக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் லியான் நகரில் உள்ளது. இதுதவிர சிங்கப்பூர் மற்றும் பியூனஸ் அயர்ஸ் நகரங்களிலும் இதன் அலுவலகங்கள் உள்ளன.


இந்த நிலையில் இன்டர்போல் போல பாரத் போல் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் குறித்து பாரத் போல் மூலமாக, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளவும், குற்றவாளிகளை பிடிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்புதான் பாரத் போல்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதை அறிமுகப்படுத்தினார். ஆன்லைன் மோசடி, பண மோசடி , போதைபொருள் கடத்தல், மனித உறுப்புகள் கடத்தல், விலங்குகள் கடத்துதல், பெண்கள் சம்பந்தமான வழக்குகள் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபடும்  குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேவைப்படும் உதவிகளையும் ஒத்துழைப்பையும் பெற்று விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகளை முடிக்க பாரத் போல் தளம் அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்