ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட.. இன்று வருகிறது.. 8 பேர் கொண்ட மத்திய குழு!

Dec 06, 2024,11:43 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னை வருகிறது ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழு.


வங்கக்கடலில் கடந்த 29ஆம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால்  அப்பகுதிகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது.




தொடர் மழையால் உளுந்து, மக்காச்சோளம், கடலை, நெல், பன்னீர் கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்திருந்த விவசாய விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் முழுவதும் அழுகி கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையுற்றனர். மேலும் இதனை சரி செய்ய உரிய நிவாரண வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 2000 ரூபாய் நிதி உதவியும் அளிக்கப்படவுள்ளது.


இதற்கிடையே இப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்ய 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்தார். அப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்புமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.


இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகிறது.

மத்திய உள்துறை இணை செயலாளரான ராஜேஷ் குப்தா தலைமையில் டாக்டர் கே.பொன்னுசாமி, சோனா மணி ஹாபாம், ஆர்.சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கெட்டி, கே.எம் பாலாஜி ஆகியோர் அடங்கிய எட்டு பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது. 


சென்னை வரும் இந்த குழுவினர்  புயல் மழையால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் பிரிந்து சென்று நாளை ஆய்வு செய்ய உள்ளனர். இதன்பிறகு சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் மத்திய குழுவினர் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த புயல் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை குழு தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்