டெல்லி: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை அதாவது ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் இரண்டாவது அமர்வு மார்ச் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 4 தேதி வரை நடைபெற உள்ளது.
இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், யூஜிசி வரைவுக் கொள்கை, வக்பு வாரிய திருத்த சட்டம், உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானை அதிர வைத்த உமர்ஷா மரணம்.. வெறும் 15 வயதுதான்.. மாரடைப்பால் நடந்த பரிதாபம்!
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
புரட்டாசி மாதம் வருகிறது.. செப்டம்பர் 17ம் தேதி முதல்.. பெருமாளுக்குரிய விசேஷ மாதம்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}