டெல்லி: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை அதாவது ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் இரண்டாவது அமர்வு மார்ச் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 4 தேதி வரை நடைபெற உள்ளது.
இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், யூஜிசி வரைவுக் கொள்கை, வக்பு வாரிய திருத்த சட்டம், உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
{{comments.comment}}