பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்.. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

Jan 30, 2025,08:35 PM IST

டெல்லி: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.


2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை அதாவது ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல் இரண்டாவது அமர்வு மார்ச் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 4 தேதி வரை நடைபெற உள்ளது. 


இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், யூஜிசி வரைவுக் கொள்கை, வக்பு வாரிய திருத்த சட்டம், உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

news

3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

news

SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

அதிகம் பார்க்கும் செய்திகள்