அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பென்ஷன்.. .மோடி அரசின் அடுத்த அதிரடி

Aug 25, 2024,09:59 AM IST

டில்லி : நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


நாடு முழுவதும் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் 90 லட்சம் வரையிலான மக்கள் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது. ஒருவரின் பணி காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் பென்ஷன் வழங்குவதை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. National pension scheme (NPS) என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டம், Unified pension scheme (UPS)என்ற பெயரில் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டமாக மாற்றப்பட உள்ளது.




தற்போது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனடைந்து வருபவர்களும் இந்த ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. மாநில அரசுகளும் இந்த ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளதாம். இந்த புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி சம்பள தொகையில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீதம் கிடைக்கும்.


ஒருவேளை ஓய்வூதியதாரர் உயிரோடு இல்லாமல் இருந்தால், அவரது குடும்பத்திற்கு 60 சதவீதம் தொகை கிடைக்கும். கூடுதலாக, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்து, பிறகு தங்கள் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.


ஓய்வு பயன், பணி ஓய்விற்கு பிறகும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த புதிய பென்ஷன் திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. 


ரிசர்வ் வங்கி, உலக வங்கி, மாநில அரசுகள், பல்வேறு முக்கிய நிறுவனங்கள் ஆகியவற்றுடன் 100 க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் நடத்திய பிறகு இந்த புதிய திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய பென்ஷன் திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்த முக்கிய அம்சங்களை விரிவான அறிக்கையாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்