வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

Apr 01, 2025,09:01 PM IST

டெல்லி: மத்திய அரசு வக்பு வாரிய சட்ட மசோதாவை  நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யவுள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதால் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் முழுமையாக இதை எதிர்த்துப் பேசவும், வாக்களிக்கவும் முடிவு செய்துள்ளன.


வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை முதலில் லோக்சபாவிலும், பின்னர் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யவுள்ளது. நாளை பிற்பகல் லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து விவாதமும், இறுதியில் வாக்கெடுப்பும் நடைபெறும்.


மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் விவாதத்தில் முழுஅளவில் கலந்து கொண்டு கடுமையான முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், வாக்கெடுப்பின்போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டது.




இதுகுறித்து ஆர்எஸ்பி தலைவுர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், விவாதத்தில் முழு அளவில் பங்கேற்போம். கடுமையாக எதிர்பபோம். வாக்கெடுப்பிலும் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.


நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை சரியான முறையில் நிர்வகிக்க இந்த மசோதாவை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது வக்பு வாரியங்களின் உரிமையைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.


லோக்சபாவிலும் அடுத்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதால் தனது கட்சி எம்.பிக்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவை காங்கிரஸ் கட்சி பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்