டெல்லி: மத்திய அரசு வக்பு வாரிய சட்ட மசோதாவை நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யவுள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதால் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் முழுமையாக இதை எதிர்த்துப் பேசவும், வாக்களிக்கவும் முடிவு செய்துள்ளன.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை முதலில் லோக்சபாவிலும், பின்னர் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யவுள்ளது. நாளை பிற்பகல் லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து விவாதமும், இறுதியில் வாக்கெடுப்பும் நடைபெறும்.
மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் விவாதத்தில் முழுஅளவில் கலந்து கொண்டு கடுமையான முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், வாக்கெடுப்பின்போது மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆர்எஸ்பி தலைவுர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், விவாதத்தில் முழு அளவில் பங்கேற்போம். கடுமையாக எதிர்பபோம். வாக்கெடுப்பிலும் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை சரியான முறையில் நிர்வகிக்க இந்த மசோதாவை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது வக்பு வாரியங்களின் உரிமையைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
லோக்சபாவிலும் அடுத்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதால் தனது கட்சி எம்.பிக்கள் அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவை காங்கிரஸ் கட்சி பிறப்பித்துள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}