ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சாம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு 47 வாக்குககளைப் பெற்று அபார வெற்றி பெற்றது.
பெரும்பான்மை பலத்துக்கு தேவை 41 எம்எல்ஏக்களின் ஆதரவு. ஆனால் கூடுதலாக 6 வாக்குகளைப் பெற்றுள்ளது சாம்பாய் சோரன் அரசு.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி அரசு ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த் சோரனை பல மணி நேரம் விசாரித்தனர். விசாரணைக்கு இடையே அவர் ஆளுநர் மாளிகைக்குப் போய் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சாம்பாய் சோரன் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இந்த அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் சாம்பாய் சோரன். இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்டு பேசினார்.
இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 வாக்குகள் விழுந்தன. அரசுக்கு எதிராக 29 வாக்குகள் பதிவாகின.
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}