ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சாம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு 47 வாக்குககளைப் பெற்று அபார வெற்றி பெற்றது.
பெரும்பான்மை பலத்துக்கு தேவை 41 எம்எல்ஏக்களின் ஆதரவு. ஆனால் கூடுதலாக 6 வாக்குகளைப் பெற்றுள்ளது சாம்பாய் சோரன் அரசு.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி அரசு ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த் சோரனை பல மணி நேரம் விசாரித்தனர். விசாரணைக்கு இடையே அவர் ஆளுநர் மாளிகைக்குப் போய் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சாம்பாய் சோரன் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இந்த அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் சாம்பாய் சோரன். இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்டு பேசினார்.
இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 வாக்குகள் விழுந்தன. அரசுக்கு எதிராக 29 வாக்குகள் பதிவாகின.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}