Tamil Nadu Rain Update: 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Jun 02, 2024,05:59 PM IST

சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது தான் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சமீப நாட்களாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து ஆறுதல் அளித்து வருகிறது.


இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஜூன் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




அதோடு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் ஜூன் 05ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலார்ட் விடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டு மழை நிலவரம் குறித்து  தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று மழையை எதிர்நோக்கலாம். பெங்களூரில் நல்ல மழை காத்திருக்கிறது. காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்