சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது தான் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சமீப நாட்களாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து ஆறுதல் அளித்து வருகிறது.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஜூன் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் ஜூன் 05ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலார்ட் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மழை நிலவரம் குறித்து தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று மழையை எதிர்நோக்கலாம். பெங்களூரில் நல்ல மழை காத்திருக்கிறது. காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}