அலர்ட் மக்களே.. மீண்டும் பரவும் கொரோனா.. சண்டிகரில் மாஸ்க் அணிவது  கட்டாயம்!

Dec 23, 2023,11:45 AM IST
சண்டிகர்: மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சண்டிகரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விடாது மக்களை துரத்தும் வைரஸாக கொரோனா உருவெடுத்துள்ளது. அலை அலையாக பரவி ஆட்டம் காட்டிய கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து மட்டுப்பட்டுவிட்டாலும் கூட அதன் உருவத்தை மாற்றி துரத்திக் கொண்டே வருகிறது. 

தற்போது உருமாறிய கொரோனா (ஜேஎன் 1) பரவல் பரலாக அதிகரித்து வருகிறது. 640 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.2997 பேர்  கொரோனா தொற்று காரணமாக மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் தற்போது சண்டிகரும் சேர்ந்துள்ளது.



கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இனி பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைத்து தரப்பினர்களும் முகக்கவசம் அணிவதை நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு சளி, இருமல் மற்றும் சிறியளவில் வைரஸ் தொற்று இருந்தாலும் மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்வதால் நோய் பரவும் அபாயம் குறையும் என்றும், பொதுமக்கள் பீதி அடையாமல் விழிப்புணர்வுடன் இருக்கவும், அரசுக்கு  ஒத்துழைப்பு தர வேண்டும் என்று  நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

அதிகம் பார்க்கும் செய்திகள்