அமராவதி: ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி முன்னிலையில் உள்ளது. அங்கு ஆட்சியையும் பிடிக்கிறது. இந்நிலையில், ஜூன் 9ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
1970ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் சந்திரபாபு நாயுடு. அதன்பின்னர் 1978ல் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார். பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடமே தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1989ல் தெலுங்கு தேசம் எம்எல்ஏவாக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1999ல் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
8 முறை எம்எல்ஏவாகவும், 3 முறை முதல்வராகவும் இருந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய அரசியலில் ஈடுபட்டார். பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் முக்கியப் பங்காற்றினார். கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு கடந்த 2019ல் நடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த முறை வெற்றி பெற்றுள்ளார். 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 16 லோக்சபா தொகுதிகளிலும் தெலுங்குதேசம் வெல்லும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜூன் 9ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சட்டசபையில் அவமதிக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. இதனால் அழுதபடி வெளியே வந்த அவர் முதல்வராகத்தான் இனி சட்டசபையில் நுழைவேன் என்று சவால் விட்டிருந்தார். தற்போது முதல்வராக சட்டசபைக்குள் சென்று தனது சபதத்தை நிறைவேற்றவுள்ளார்.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}