புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!

Dec 23, 2025,05:12 PM IST

-  கண்ணகி அண்ணாதுரை



சென்னை: சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தக திருவிழா இந்த வருடம் 2026 ஜனவரி 7- 19 வரை நடைபெறும் என்று பப்பாசி நிர்வாக குழுவால் வெளியிட்ட அறிவிப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அதாவது புத்தகத் தொடக்க விழாவுக்கு முதல்வரின் தேதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2026 ஜனவரி 8ம் தேதி தொடக்க விழா தள்ளிப் போயுள்ளது. அன்று தொடங்கி, ஜனவரி 21வரைம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்களில் தினசரி காலை 11.00மணி முதல் இரவு 08.30வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் பப்பாசி நிர்வாக குழுவால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.




புத்தக விழாவில் வழக்கம் போல இடம் பெறும் அனைத்து அம்சங்களும் இந்த முறையும் இடம் பெறும். புத்தகங்கள் வாங்குவதில் கழிவுச் சலுகை உள்ளிட்டவையும் வழக்கம் போல இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு பல ஆயிரம் பேர் வருவார்கள். மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த கண்காட்சியானது, ஒரு திருவிழா போல ஆண்டுதோறும் நடைபெறும். முன்பு பல்வேறு இடங்களில் மாறி மாறி நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி கடந்த சில வருடங்களாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!


(கண்ணகி அண்ணாமலை, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்