சென்னை: அயோத்திக்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருவதற்கு வசதியாக அங்குள்ள ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்கவுள்ளது.
புதிய அறிவிப்பின்படி சென்னை, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, தர்பங்கா, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்த விமான சேவைகள் தொடங்கவுள்ளன. தனியார் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த நகரங்களிலிருந்து அயோத்திக்கு விமான சேவையை நடத்தவுள்ளது.
இந்த விமான சேவையை பிப்ரவரி 1ம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை - அயோத்தி நேரடி விமானமானது தினசரி பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு, மாலை 3.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும். அயோத்தியிலிருந்து சென்னை வரும் விமானம் மாலை 4 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}