ராமரை தரிசிக்க.. சென்னையிலிருந்து அயோத்திக்கு.. பிப்ரவரி 1 முதல்.. நேரடி விமான சேவை!

Jan 30, 2024,06:54 PM IST

சென்னை: அயோத்திக்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருவதற்கு வசதியாக அங்குள்ள ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது.


தற்போது நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்கவுள்ளது.




புதிய அறிவிப்பின்படி சென்னை, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, தர்பங்கா, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்த விமான சேவைகள் தொடங்கவுள்ளன. தனியார் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த நகரங்களிலிருந்து அயோத்திக்கு விமான சேவையை நடத்தவுள்ளது.


இந்த விமான சேவையை பிப்ரவரி 1ம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைக்கவுள்ளார்.


சென்னை - அயோத்தி நேரடி விமானமானது தினசரி  பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு,  மாலை 3.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.  அயோத்தியிலிருந்து  சென்னை வரும் விமானம் மாலை 4 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்