சென்னை : சென்னை-காட்பாடி இடையே புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இனி சென்னையில் இருந்து புறநகர் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு மின்சார ரயிலில் கூட்டத்தில் இடித்துக் கொண்டு செல்லுவதில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து, காட்பாடி வரை செல்லும் வந்தே பாரத் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 180 கி.மீ., வரை முழு வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் பெட்டிகள் புறநகர் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை-காட்பாடி மட்டுமல்ல, சென்னை-திருப்பதி இடையேவும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 180 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இயக்க தெற்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மெட்ரோ ரயில்களில் உள்ளது போல் தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட வசதிகளும், சொகுசு வசதிகளும் உள்ளடக்கியதாக இந்த வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இனி சென்னை மக்கள் சொகுசாக மட்டுமல்ல, மிக குறுகிய காலத்திலேயே ஆந்திரா வரை ஈஸியாக சென்று வர முடியும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}