சென்னை : சென்னை-காட்பாடி இடையே புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இனி சென்னையில் இருந்து புறநகர் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு மின்சார ரயிலில் கூட்டத்தில் இடித்துக் கொண்டு செல்லுவதில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து, காட்பாடி வரை செல்லும் வந்தே பாரத் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 180 கி.மீ., வரை முழு வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் பெட்டிகள் புறநகர் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை-காட்பாடி மட்டுமல்ல, சென்னை-திருப்பதி இடையேவும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 180 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இயக்க தெற்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மெட்ரோ ரயில்களில் உள்ளது போல் தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட வசதிகளும், சொகுசு வசதிகளும் உள்ளடக்கியதாக இந்த வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இனி சென்னை மக்கள் சொகுசாக மட்டுமல்ல, மிக குறுகிய காலத்திலேயே ஆந்திரா வரை ஈஸியாக சென்று வர முடியும்.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}