சென்னை : சென்னை-காட்பாடி இடையே புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இனி சென்னையில் இருந்து புறநகர் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு மின்சார ரயிலில் கூட்டத்தில் இடித்துக் கொண்டு செல்லுவதில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து, காட்பாடி வரை செல்லும் வந்தே பாரத் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 180 கி.மீ., வரை முழு வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் பெட்டிகள் புறநகர் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை-காட்பாடி மட்டுமல்ல, சென்னை-திருப்பதி இடையேவும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 180 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இயக்க தெற்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மெட்ரோ ரயில்களில் உள்ளது போல் தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட வசதிகளும், சொகுசு வசதிகளும் உள்ளடக்கியதாக இந்த வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இனி சென்னை மக்கள் சொகுசாக மட்டுமல்ல, மிக குறுகிய காலத்திலேயே ஆந்திரா வரை ஈஸியாக சென்று வர முடியும்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}