சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இது சென்னைவாசிகளுக்கானது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு குறித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இத்தகைய தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும். தேர்வில் எந்த எந்த வகையான கேள்விகள் கேட்கப்படும். அதற்கு எவ்வாறு தயாராவது உள்ளிட்டவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்த தகுதியான மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை நேரடியாக எடுத்து வந்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மொத்தமாக 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் தனதனி கல்வி தகுதி உள்ளது. எனினும் பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உயர்நிலை மேல்நிலைப் படிப்புகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க போகிறவர்கள். இந்த தேர்வுகள் குறித்து நன்கு புரிந்து கொள்ள அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் குரூப் தேர்வுகள் பற்றி பயிற்சி வகுப்புகளை அரசே நடத்துகிறது. கிண்டியில் இதற்கான பயிற்சிகள் நாளை முதல் தொடங்குகிறது .இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப் 2 ஏவிற்கு 1820 பணியிடங்களும் என மொத்தமாக 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏவிற்கான முதல் நிலைத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையில் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டி உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}