சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இது சென்னைவாசிகளுக்கானது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு குறித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இத்தகைய தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும். தேர்வில் எந்த எந்த வகையான கேள்விகள் கேட்கப்படும். அதற்கு எவ்வாறு தயாராவது உள்ளிட்டவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்த தகுதியான மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை நேரடியாக எடுத்து வந்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மொத்தமாக 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் தனதனி கல்வி தகுதி உள்ளது. எனினும் பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உயர்நிலை மேல்நிலைப் படிப்புகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க போகிறவர்கள். இந்த தேர்வுகள் குறித்து நன்கு புரிந்து கொள்ள அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் குரூப் தேர்வுகள் பற்றி பயிற்சி வகுப்புகளை அரசே நடத்துகிறது. கிண்டியில் இதற்கான பயிற்சிகள் நாளை முதல் தொடங்குகிறது .இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப் 2 ஏவிற்கு 1820 பணியிடங்களும் என மொத்தமாக 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏவிற்கான முதல் நிலைத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையில் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டி உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}