சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக ஜிம் கூடங்கள், பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கு மாநகராட்சி சார்பில் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு அப்படி ஜிம் இல்லை. இந்தக் குறையைப் போக்க EmpowHER என்ற பெயரில் ஜிம்களை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஜிம்மை கோடம்பாக்கம் சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ரூ. 35 லட்சம் செலவில் இந்த ஜிம் உருவாக்கப்பட்டது. கவுன்சிலர் வார்டு நல நிதியிலிருந்து இது உருவாக்கப்பட்டது. இதுதான் சென்னையில் அமைந்த பெண்களுக்கான முதல் மாநகராட்சி ஜிம் என் பெருமை கொண்டது.
தற்போது இதுபோன்ற ஜிம்களை அனைத்து வார்டுகளுக்கும் விரிவாக்கம் செய்கிறது மாநகராட்சி நிர்வாகம். அதன்படி சென்னை மாநகராட்சியில் தற்போது உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கான ஜிம் உருவாக்கப்படுகிறது. அனைத்து ஜிம்களும் வார்டு நல நிதியிலிருந்து அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த ஜிம்களில் தனியார் ஜிம்களில் உள்ளது போலவே அனைத்து நவீன உடற்பயிற்சிக் கருவிகளும் இடம்பெறும்.
இந்த ஜிம்கள் அனைத்தும் அமைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி ஒன்றில் அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்களைக் கொண்ட மாநகராட்சி என்ற பெயர் சென்னைக்குக் கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}