சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக ஜிம் கூடங்கள், பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கு மாநகராட்சி சார்பில் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு அப்படி ஜிம் இல்லை. இந்தக் குறையைப் போக்க EmpowHER என்ற பெயரில் ஜிம்களை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஜிம்மை கோடம்பாக்கம் சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ரூ. 35 லட்சம் செலவில் இந்த ஜிம் உருவாக்கப்பட்டது. கவுன்சிலர் வார்டு நல நிதியிலிருந்து இது உருவாக்கப்பட்டது. இதுதான் சென்னையில் அமைந்த பெண்களுக்கான முதல் மாநகராட்சி ஜிம் என் பெருமை கொண்டது.
தற்போது இதுபோன்ற ஜிம்களை அனைத்து வார்டுகளுக்கும் விரிவாக்கம் செய்கிறது மாநகராட்சி நிர்வாகம். அதன்படி சென்னை மாநகராட்சியில் தற்போது உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கான ஜிம் உருவாக்கப்படுகிறது. அனைத்து ஜிம்களும் வார்டு நல நிதியிலிருந்து அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த ஜிம்களில் தனியார் ஜிம்களில் உள்ளது போலவே அனைத்து நவீன உடற்பயிற்சிக் கருவிகளும் இடம்பெறும்.
இந்த ஜிம்கள் அனைத்தும் அமைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி ஒன்றில் அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்களைக் கொண்ட மாநகராட்சி என்ற பெயர் சென்னைக்குக் கிடைக்கும்.
புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}