சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக ஜிம் கூடங்கள், பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கு மாநகராட்சி சார்பில் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு அப்படி ஜிம் இல்லை. இந்தக் குறையைப் போக்க EmpowHER என்ற பெயரில் ஜிம்களை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஜிம்மை கோடம்பாக்கம் சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ரூ. 35 லட்சம் செலவில் இந்த ஜிம் உருவாக்கப்பட்டது. கவுன்சிலர் வார்டு நல நிதியிலிருந்து இது உருவாக்கப்பட்டது. இதுதான் சென்னையில் அமைந்த பெண்களுக்கான முதல் மாநகராட்சி ஜிம் என் பெருமை கொண்டது.
தற்போது இதுபோன்ற ஜிம்களை அனைத்து வார்டுகளுக்கும் விரிவாக்கம் செய்கிறது மாநகராட்சி நிர்வாகம். அதன்படி சென்னை மாநகராட்சியில் தற்போது உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கான ஜிம் உருவாக்கப்படுகிறது. அனைத்து ஜிம்களும் வார்டு நல நிதியிலிருந்து அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த ஜிம்களில் தனியார் ஜிம்களில் உள்ளது போலவே அனைத்து நவீன உடற்பயிற்சிக் கருவிகளும் இடம்பெறும்.
இந்த ஜிம்கள் அனைத்தும் அமைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி ஒன்றில் அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்களைக் கொண்ட மாநகராட்சி என்ற பெயர் சென்னைக்குக் கிடைக்கும்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}