மாடுகளே ஜாக்கிரதை.. கூண்டு வண்டிகளுடன் களத்தில் குதித்தது சென்னை மாநகராட்சி

Aug 13, 2023,01:31 PM IST
சென்னை: சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி களத்தில் குதித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் சமீபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை மாடு ஒன்று முட்டித் தள்ளியது. சிறிது நேரம் அந்த சிறுமியை விடாமல் மாடு முட்டித் தூக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சிறுமிக்கு ஆபத்து ஏற்படவில்லை.




இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது. பள்ளிக்கூடத்திற்குப் போய் விட்டு பத்திரமாக பிள்ளைகள் திரும்பி வருவதற்குள் எப்படியெல்லாம் சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்று பலரும் குமுறினர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  அதிகாரிகளுடன், சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்குச்  சென்று பார்த்து நலம் விசாரித்தார். சிறுமிக்கு கிப்ட்டும், டெய்ரிமில்க் சாக்லேட்டும் கொடுத்து பரிவுடன் பேசி விட்டு வந்தார்.




தற்போது சென்னை மாநகராட்சி தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.  கூண்டு வண்டிகளுடன் மாடு பிடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் 71 மாடுகளை ஊழியர்கள் பிடித்துள்ளனர். திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், கோயம்பேடு, தண்டையார்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த மாடு வேட்டை நடந்து வருகிறது. தொடர்ந்து இந்த  நடவடிக்கை நடைபெறும்.

பசு மாடுகள், கன்றுகளுடன் பிடிக்கப்பட்டால் இரண்டையும் சேர்த்தே முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அவை பிரிக்கப்பட மாட்டாது. அதேபோல கர்ப்பமாக இருக்கும் பசுக்களுக்கும் உரிய கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளையும், கன்றுகளையும் கொட்டடியில் வைத்தே வளர்க்க வேண்டும் என்றும்,  தெருக்களில் உலவ விடக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்