சென்னை: பொதுப் பணியில் ஈடுபட்டிருப்போர் பலரும் சொல்லும் பொதுவான வார்த்தை "எனக்கு நேரமே கிடைப்பதில்லை" என்பதுதான். ஆனால் அதை முறியடித்து தனது பொதுப் பணிகள் போக, ஏழைப் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி Spoken English ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் சென்னயைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் சர்பஜெயதாஸ் நரேந்திரன்.
சென்னை மாநகராட்சியின் 44வது வார்டு கவுன்சிலர்தான் சர்பஜெயதாஸ் நரேந்திரன். இவர் பொதுப் பணிக்கு வருவதற்கு முன்பு ஆசிரியையாக இருந்தவர். ஆங்கில ஆசிரியையான இவர் தற்போது மீண்டும் ஆசிரியை அவதாரம் பூண்டுள்ளார். ஆனால் முழு நேர ஆசிரியையாக அல்லாமல், வாரந்தோறும் ஏழைப் பிள்ளைகளுக்காக ஸ்போக்கன் ஆங்கிலம் சொல்லித் தரும் சேவையை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக இதைச் செய்து வருகிறாராம் சர்பஜெயதாஸ் நரேந்திரன்.
மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் பல குழந்தைகளுக்கு "ஸ்போக்கன் இங்கிலீஸ்" என்பது பெரும் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது. இந்தக் குறையை உணர்ந்த சர்பஜெயதாஸ் நரேந்திரன், வாரந்தோறும் வார இறுதி நாட்களில் இத்தகைய பள்ளிப் பிள்ளைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
அவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது எந்த அளவுக்கு எளிமையானது என்பதை அழகாக சொல்லிக் கொடுக்கிறார். அவர்களை ஆங்கிலத்தில் உரையாட வைக்கிறார்.. எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லித் தருகிறார். கூச்சத்தைப் போக்கி இயல்பான முறையில் ஆங்கிலம் பேசுவது எப்படி என்பதை புரிய வைக்கிறார். இவர் சொல்லித் தரும் முறையாலும், இவரது எளிமையான போதனையாலும் இவரது வகுப்புக்கு வரும் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதற்கு இடையூறாக உள்ள தயக்கம், கூச்சம் நீங்கி சரளமாக பேசி வருகின்றனராம்.
சனிக்கிழமைகளில் தனக்கு மாநகராட்சிக் கூட்டம் உள்ளிட்ட வேலைகள் இல்லாமல் இருப்பதால் அந்த நாட்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆங்கில உரையாடல் வகுப்பை தான் நடத்துவதாக கவுன்சிலர் சர்பஜெயதாஸ் நரேந்திரன் கூறுகிறார்.
பொதுமக்களுக்கான பணியிலும் இவர் குறை வைப்பதில்லை. வார்டு தொடர்பான பிரச்சினைகளை மாநகராட்சிக் கூட்டங்களில் தவறாமல் எழுப்புகிறார். மக்களிடம் தொடர்ந்து சந்திப்புகளை நடத்துகிறார். வார்டில் எது என்றாலும் முன்னால் வந்து நிற்பார் என்று வார்டு மக்கள் புகழ்கிறார்கள். இப்போது பள்ளிப் பிள்ளைகளின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
"வெல்டன் மேடம்.. பாராட்டுக்கள்"!
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}