சென்னை: சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. மாணவி ஸ்வாதி பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி 2025-2026 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகளில் 98.10% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு இப் பள்ளியிலிருந்து மொத்தம் 158 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். அவர்களில் 155 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவைச் சேர்ந்த ஸ்வாதி S என்ற மாணவி 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 96, 87, 99, 95, 98, 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதே பிரிவைச் சேர்ந்த தேவ தர்ஷினி S என்ற மாணவி 600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 97, 87, 91, 95, 96, 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும், கலைப்பிரிவைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி 600-க்கு 556 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 97, 87, 89, 95, 96, 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும் பிள்ஸடூ தேர்வில், செங்கல்பட்டு மாவட்டத்திலேயே ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி 3வது இடத்தையும் பெற்று .சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
பிளஸ்டூ தேர்வில் மாநில அளவிலும் அரசுப் பள்ளிகள் மற்றம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் அசத்தலான தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: ஆசிரியர் மு. பாரதி
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}