சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 7 சதவீதம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
இன்று வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.
மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536.
100% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் -2,639.
95% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -5,170.
100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -489.
95% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் 6 -1,572.
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்:

1. அரசுப் பள்ளிகள் - 92.16%
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%
4. இருபாலர் பள்ளிகள் - 95.30%
5. பெண்கள் பள்ளிகள் - 97.08%
6. ஆண்கள் பள்ளிகள்- 90.49%
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.59% சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 4.81% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,855.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 6,811 (76.92 %).
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 250.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 238(95.20%).
தேர்வெழுதிய இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 25,521.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 6,171 (24.18%).
மேல்நிலை முதலாம் ஆண்டு - (மார்ச்2026):
பொதுத் தேர்வு தேர்வெழுதிய முதலாம் ஆண்டு தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 20444.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8491 (41.53%).
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}