சென்னை : விஜய் நடத்துள்ள லியோ படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் தயாரிப்பு நிறுவனத்திற்கு சில முக்கிய விஷயங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுக்க திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் சில இடங்களில் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. ஆனால் தமிழகத்தில் முதல் காட்சியை காலை 9 மணிக்கே திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்தும், லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்கக் கோரியும் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரைணக்கு ஏற்ற சென்னை ஐகோர்ட், இன்று (அக்டோர் 17) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் வழக்காக லியோ வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், லியோ படத்தை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு படத்தை திரையிட கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து நாளை பிற்பகலுக்குள் உத்தரவு பிறப்பிக்கும் படி தமிழக அரசுக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனால் லியோ படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் எத்தனை மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் திக் திக் என உணர்விலேயே இருந்து வருகிறார்கள். தற்போது லியோ படத்தின் முதல் காட்சி எப்போது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக அரசின் வசமே மீண்டும் சென்றுள்ளது
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}