மதுரை போகும் சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. இனி தேஜாஸ் தாம்பரத்திலும் நின்று செல்லும்!

Feb 25, 2023,09:20 AM IST
சென்னை: சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மதுரை இடையிலான விரைவு ரயில்தான் தேஜாஸ். சென்னையிலிருந்து தினசரி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி மதியம் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். இடையில் திருச்சி, கொடைரோடு ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்.



அதேபோல மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து 3 மணிக்குக் கிளம்பி, சென்னை எழும்பூர் சந்திப்பை 9.30 மணிக்கு வந்தடையும்.  இடையில் கொடைக்கானல் ரோடு மற்றும் திருச்சியில் மட்டும் ரயில் நிற்கும்.

இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ரயில்வே இதைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இதுதொடர்பாக தொடர்ந்து  முயற்சித்து வந்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தும் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.




இந்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.  சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் தாம்பரத்தில் இந்த ரயில் நிற்கும்.

இதுகுறித்து டிவீட் போட்டுள்ள சு.வெங்கடேசன், தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். ரயில்வே அமைச்சரிடம் நேரில் பல முறை வலியுறுத்தினேன். இன்று வெற்றி கிட்டியுள்ளது. அமைச்சர்
@AshwiniVaishnaw க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிறப்பான செய்திதான். அப்படியே இன்னொரு மக்கள் கோரிக்கையையும் ரயில்வே அமைச்சகம் கவனிக்க வேண்டும். தேஜாஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உணவு குறித்து பெரும்பாலான பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். காரணம் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் ஸ்னாக்ஸ் அதிக அளவில் தரப்படுகிறது. வயிறும், மனசும் நிறையும் படியான தமிழ்நாட்டு உணவு வகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே தரமான, தமிழ்நாட்டு உணவைத் தருவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதையும் ரயில்வே நிர்வாகம் கவனித்தால் நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்