மதுரை போகும் சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. இனி தேஜாஸ் தாம்பரத்திலும் நின்று செல்லும்!

Feb 25, 2023,09:20 AM IST
சென்னை: சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மதுரை இடையிலான விரைவு ரயில்தான் தேஜாஸ். சென்னையிலிருந்து தினசரி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி மதியம் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். இடையில் திருச்சி, கொடைரோடு ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்.



அதேபோல மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து 3 மணிக்குக் கிளம்பி, சென்னை எழும்பூர் சந்திப்பை 9.30 மணிக்கு வந்தடையும்.  இடையில் கொடைக்கானல் ரோடு மற்றும் திருச்சியில் மட்டும் ரயில் நிற்கும்.

இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ரயில்வே இதைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இதுதொடர்பாக தொடர்ந்து  முயற்சித்து வந்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தும் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.




இந்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.  சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் தாம்பரத்தில் இந்த ரயில் நிற்கும்.

இதுகுறித்து டிவீட் போட்டுள்ள சு.வெங்கடேசன், தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். ரயில்வே அமைச்சரிடம் நேரில் பல முறை வலியுறுத்தினேன். இன்று வெற்றி கிட்டியுள்ளது. அமைச்சர்
@AshwiniVaishnaw க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிறப்பான செய்திதான். அப்படியே இன்னொரு மக்கள் கோரிக்கையையும் ரயில்வே அமைச்சகம் கவனிக்க வேண்டும். தேஜாஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உணவு குறித்து பெரும்பாலான பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். காரணம் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் ஸ்னாக்ஸ் அதிக அளவில் தரப்படுகிறது. வயிறும், மனசும் நிறையும் படியான தமிழ்நாட்டு உணவு வகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே தரமான, தமிழ்நாட்டு உணவைத் தருவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதையும் ரயில்வே நிர்வாகம் கவனித்தால் நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்