மதுரை போகும் சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. இனி தேஜாஸ் தாம்பரத்திலும் நின்று செல்லும்!

Feb 25, 2023,09:20 AM IST
சென்னை: சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மதுரை இடையிலான விரைவு ரயில்தான் தேஜாஸ். சென்னையிலிருந்து தினசரி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி மதியம் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். இடையில் திருச்சி, கொடைரோடு ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்.



அதேபோல மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து 3 மணிக்குக் கிளம்பி, சென்னை எழும்பூர் சந்திப்பை 9.30 மணிக்கு வந்தடையும்.  இடையில் கொடைக்கானல் ரோடு மற்றும் திருச்சியில் மட்டும் ரயில் நிற்கும்.

இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ரயில்வே இதைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இதுதொடர்பாக தொடர்ந்து  முயற்சித்து வந்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தும் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.




இந்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. சென்னை - மதுரை இடையிலான தேஜாஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.  சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் தாம்பரத்தில் இந்த ரயில் நிற்கும்.

இதுகுறித்து டிவீட் போட்டுள்ள சு.வெங்கடேசன், தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். ரயில்வே அமைச்சரிடம் நேரில் பல முறை வலியுறுத்தினேன். இன்று வெற்றி கிட்டியுள்ளது. அமைச்சர்
@AshwiniVaishnaw க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிறப்பான செய்திதான். அப்படியே இன்னொரு மக்கள் கோரிக்கையையும் ரயில்வே அமைச்சகம் கவனிக்க வேண்டும். தேஜாஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உணவு குறித்து பெரும்பாலான பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். காரணம் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் ஸ்னாக்ஸ் அதிக அளவில் தரப்படுகிறது. வயிறும், மனசும் நிறையும் படியான தமிழ்நாட்டு உணவு வகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே தரமான, தமிழ்நாட்டு உணவைத் தருவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதையும் ரயில்வே நிர்வாகம் கவனித்தால் நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்