சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை பீக் அவரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில் தற்போது பிரச்சினை சரியாகி போக்குவரத்து இயல்பாகியுள்ளது.
சென்னை மாநகரின் மிக முக்கிய போக்குவரத்தாக மாறியுள்ளது மெட்ரோ ரயில். பிற போக்குவரத்தை விட இது சவுகரியமாகவும், எளிமையாகவும் இருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்கள் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை பீக் அவர் சமயத்தில் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் மின் கம்பி ஒன்று துண்டிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதலில் அரை மணிநேரத்தில் சரி செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் கூட பிரச்சினை சரி செய்யப்படவில்லை.
இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகருக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆலந்தூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அதேசமயம், சென்டிரல் ரயில் நிலையத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
ஆலந்தூர் முதல் விம்கோ நகர் வரை ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். காலை நேரம் என்பதால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள். இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மின்சார ரயில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}