சென்னை: சென்னை அருகே சோழவரம் பகுதியில் இன்று நடந்த போலீஸ் என்கவுண்டரில், ரவுடி முத்து சரவணன் மற்றும் அவரது நண்பர் சண்டே சதீஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன். இவரை ரவுடிகள் கடந்த மாதம் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முக்கிய குற்றவாளி முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர். அவர் திருவள்ளூர் மாவட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற போலீசார் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள புதூர் மாரம்பேடி பகுதியில் ரவுடி முத்து சரவணனை பார்த்தனர். முத்து சரவணனுடன் அவரது நண்பர் சண்டே சதீஷ் என்பவரும் இருந்தார்.
இவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடிகள் தரப்பில் போலீஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் போலீசார் நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரவுடிகள் இருவரையும் போலீசார் சுட்டனர். இதில், முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சண்டே சதீஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ் அங்கு உயிரிழந்தார். காயமடைந்த போலீசார் 3 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}