சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்.. 3 நாள் வெளியே வராதீங்க.. போலீஸ் அட்வைஸ்!

Dec 03, 2023,06:00 PM IST

சென்னை : சென்னைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மிச்சாங் (மிக்ஜாம்) புயல், அதிதீவிர புயலாக ஆந்திரா அருகில் டிசம்பர் 05ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் மூன்று நாட்களுக்கு யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை போலீசார் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கு 200 மில்லி மீட்டர் அளவுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என்று அர்த்தம்.


சென்னை போலீசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று பிற்பகல் முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், புயல் கரையை கடந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை அடுத்த 3 நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மழைநீரில் வாகனங்களை இயக்க வேண்டாம். அதிக மழை பெய்யும் சமயங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம். 




மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் கிரேன் போன்ற இயந்திரங்களை பத்திரமாக நிறுத்தி வைக்க வேண்டும்.  வெல்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



சென்னையில் கனமழை காரணமாக பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து மேலும் 100 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. படகுகள் போன்ற மீட்பு, பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.


Michaung புயல் எதிரொலி... சென்னை, ஆந்திரா வரும் 54 ரயில்கள் ரத்து

சமீபத்திய செய்திகள்

news

"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

news

திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

news

"இனி கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம்!" – ஆ.ராசா அதிரடி பேச்சு

news

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

news

மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

news

மின்வாரிய நிதிநிலை...வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்

news

இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? சூசகமாக சொன்ன கே.என்.நேரு

news

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை தீர்த்துக் கட்ட திட்டமிட்ட இஸ்ரேல்.. பரபரப்புத் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்