Michaung புயல் எதிரொலி... சென்னை, ஆந்திரா வரும் 54 ரயில்கள் ரத்து

Dec 03, 2023,12:06 PM IST

சென்னை : வட தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மிச்சாங் (மிக்ஜாம்) புயல் டிசம்பர் 05 ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் ஆந்திரா வரை செல்லும் 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளன.


தென்மேற்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 3 ம் தேதி முதல் டிசம்பர் 5 ம் தேதி வரை மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. காற்றின் வேகமும் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள், சிறப்பு ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து ராஞ்சி வழியாக தென் தமிழகத்திற்கு வரும் ரயில்கள், தமிழகம் வழியாக கேரளாவின் ஆலப்புழா வரை செல்லும் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 




நாகர்கோவில் - ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 54 ரயில்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தொலைதூரம் செல்லும் 108 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது. விஜயவாடா - சென்னை சென்ட்ரல், நிஜாமுதீன் சென்னை துரந்தோ ரயில், கயா சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


நகர்ந்து வரும் "புயல்".. 3, 4 தேதிகளில் செம மழை இருக்கு.. யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்