சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இதுவரை 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி திருவேங்கடம் என்பவரை மதுரவாயல் அருகே வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்தப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் ஒரு பகுதியை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் இருப்பதாகவும் போலீஸார் விளக்கியுள்ளனர். வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்டவற்றையும் காவல்துறை தெளிவாக வெளியிட்டுள்ளது. அனைவருமே வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொலையாளிகளாக கருதப்படுவோர் திட்டமிட்டு ஆமஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து மின்னல் வேகத்தில் வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. கொலையாளிகள் பலரும் சொமாட்டோ யூனிபார்ம் போட்டுள்ளனர். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து விட்டு, அவர் தப்பி விடாத வகையில் மடக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}