ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எப்படி?.. பரபரப்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது சென்னை போலீஸ்!

Jul 14, 2024,01:31 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இதுவரை 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி திருவேங்கடம் என்பவரை மதுரவாயல் அருகே வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.




இந்தப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் ஒரு பகுதியை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் இருப்பதாகவும் போலீஸார் விளக்கியுள்ளனர். வீடியோ  காட்சியில் பதிவாகியுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்டவற்றையும் காவல்துறை தெளிவாக வெளியிட்டுள்ளது. அனைவருமே வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.




இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொலையாளிகளாக கருதப்படுவோர் திட்டமிட்டு ஆமஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து மின்னல் வேகத்தில் வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. கொலையாளிகள் பலரும் சொமாட்டோ யூனிபார்ம் போட்டுள்ளனர். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து விட்டு, அவர் தப்பி விடாத வகையில் மடக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.


ஆம்ஸ்ட்ராங் படுகொலை வீடியோ

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்