சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இதுவரை 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி திருவேங்கடம் என்பவரை மதுரவாயல் அருகே வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்தப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் ஒரு பகுதியை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் இருப்பதாகவும் போலீஸார் விளக்கியுள்ளனர். வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்டவற்றையும் காவல்துறை தெளிவாக வெளியிட்டுள்ளது. அனைவருமே வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொலையாளிகளாக கருதப்படுவோர் திட்டமிட்டு ஆமஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து மின்னல் வேகத்தில் வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. கொலையாளிகள் பலரும் சொமாட்டோ யூனிபார்ம் போட்டுள்ளனர். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து விட்டு, அவர் தப்பி விடாத வகையில் மடக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}