சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தொடர்பாக இதுவரை 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி திருவேங்கடம் என்பவரை மதுரவாயல் அருகே வைத்து போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்தப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் ஒரு பகுதியை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் இருப்பதாகவும் போலீஸார் விளக்கியுள்ளனர். வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்டவற்றையும் காவல்துறை தெளிவாக வெளியிட்டுள்ளது. அனைவருமே வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொலையாளிகளாக கருதப்படுவோர் திட்டமிட்டு ஆமஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து மின்னல் வேகத்தில் வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. கொலையாளிகள் பலரும் சொமாட்டோ யூனிபார்ம் போட்டுள்ளனர். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து விட்டு, அவர் தப்பி விடாத வகையில் மடக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.
“நான் இருக்கேன்” ... மனிதம் மலர்கையில் – (பகுதி 5)
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
{{comments.comment}}