சென்னை உள்ளிட்ட வடக் கடலோர பகுதிகளில்.. இன்று டமால் டுமீல் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Dec 19, 2024,10:31 AM IST

சென்னை: வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு பகுதிகளில் நகர இருப்பதால் இன்று சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.பின்னர் சென்னையில் மாலை வேளையில் நகர் முழுவதும் பனிமூட்டமாக காணப்பட்டது. ‌ 




இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் தற்போது வரை தேனாம்பேட்டை, மந்தவெளி,மயிலாப்பூர்தியாகராய நகர், சைதாப்பேட்டை, அடையாறு, எம்ஆர்சி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் வட சென்னை பகுதிகளான ராயப்பேட்டை, திருவெற்றியூர், ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் சென்னை முழுவதும் மழையுடன் கடுமையான பனிமூட்டமும் நிலவுவதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலையில் சென்று வருகின்றனர். 


அதே சமயத்தில் இந்த தொடர் மழை காரணமாக அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மழையில் நனைந்தபடியே செல்கின்றனர். திருவள்ளுவர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது.


இதற்கிடையே வங்கக்கடலில் வலுவடைந்த   காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீனவர்கள் காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். 


அதேபோல் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளிலும்  கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடக்கடலோர மாவட்டங்கள்  மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்