சென்னை : சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி ஆரஞ்சு அலர்ட்டும், அக்டோபர் 16ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுத்து இந்திய வானகலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர 25 மாவடட்டங்களில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் பகலில் மேகமூட்டமாகவும், இரவில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் முதலில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சொல்லப்பட்டது.
இன்று பிற்பகல் வெளியிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில், ராமநாபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும், அதாவது அக்டோபர் 19ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது. அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் தான் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீரவிமாக செய்து வருகிறது. அவசர எண்கள் உள்ளிட்ட எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு 9 மணியளவில் தமிழ்நாடு வெதர்மேன் மழை தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று இரவு துவங்கி, நாளை காலை வரை சென்னையில் மிக கனமழை கொட்டி தீர்க்கும். கடலூர், புதுச்சேரியில் இருந்து மழை மேகங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. உள்ளே வந்த பிறகு சின்ராசை பிடிக்க முடியாது. இரவு முழுவதும் பெய்யும் மழையை கொண்டாடி அனுபவியுங்கள்.
கோவையில் வழக்கம் போல் மாலை முதல் மழை பெய்து வருகிறது. கோவைக்கு இது மழை மாதம். மதுரை, சிவகங்கை பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}