சென்னையில் இன்று இரவு சம்பவம் காத்திருக்கு.. வெதர்மேன் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

Oct 14, 2024,10:27 PM IST

சென்னை : சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி ஆரஞ்சு அலர்ட்டும், அக்டோபர் 16ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுத்து இந்திய வானகலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர 25 மாவடட்டங்களில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.


தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் பகலில் மேகமூட்டமாகவும், இரவில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் முதலில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சொல்லப்பட்டது.




இன்று பிற்பகல் வெளியிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில், ராமநாபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும், அதாவது அக்டோபர் 19ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது. அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் தான் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீரவிமாக செய்து வருகிறது. அவசர எண்கள் உள்ளிட்ட எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இரவு 9 மணியளவில் தமிழ்நாடு வெதர்மேன் மழை தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று இரவு துவங்கி, நாளை காலை வரை சென்னையில் மிக கனமழை கொட்டி தீர்க்கும். கடலூர், புதுச்சேரியில் இருந்து மழை மேகங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. உள்ளே வந்த பிறகு சின்ராசை பிடிக்க முடியாது. இரவு முழுவதும் பெய்யும் மழையை கொண்டாடி அனுபவியுங்கள்.    


கோவையில் வழக்கம் போல் மாலை முதல் மழை பெய்து வருகிறது. கோவைக்கு இது மழை மாதம். மதுரை, சிவகங்கை பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்