சென்னையில் இன்று இரவு சம்பவம் காத்திருக்கு.. வெதர்மேன் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

Oct 14, 2024,10:27 PM IST

சென்னை : சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி ஆரஞ்சு அலர்ட்டும், அக்டோபர் 16ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுத்து இந்திய வானகலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர 25 மாவடட்டங்களில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.


தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் பகலில் மேகமூட்டமாகவும், இரவில் அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் முதலில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சொல்லப்பட்டது.




இன்று பிற்பகல் வெளியிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில், ராமநாபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும், அதாவது அக்டோபர் 19ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது. அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் தான் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீரவிமாக செய்து வருகிறது. அவசர எண்கள் உள்ளிட்ட எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இரவு 9 மணியளவில் தமிழ்நாடு வெதர்மேன் மழை தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று இரவு துவங்கி, நாளை காலை வரை சென்னையில் மிக கனமழை கொட்டி தீர்க்கும். கடலூர், புதுச்சேரியில் இருந்து மழை மேகங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. உள்ளே வந்த பிறகு சின்ராசை பிடிக்க முடியாது. இரவு முழுவதும் பெய்யும் மழையை கொண்டாடி அனுபவியுங்கள்.    


கோவையில் வழக்கம் போல் மாலை முதல் மழை பெய்து வருகிறது. கோவைக்கு இது மழை மாதம். மதுரை, சிவகங்கை பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்