சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் படுத்துக் கிடந்த ஷம்பு என்பவரை மீட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை கொடுத்து பாதுகாப்பாக பராமரித்து வரும் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சென்னை அரசினர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை டாக்டர்கள் செய்த இந்த செயலானது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இவர்களின் செயலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியமும் பாராட்டியுள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரம் கிடந்தார். தகவவலறிந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு அவருக்குரிய பாதுகாப்பும் தேவையான சிகிச்சையும் அளித்தனர். எந்திரிக்கூட முடியாத நிலையில் இருந்த அவரை தூக்கி உட்கார வைத்தனர். படுத்துகிடந்த அவரின் உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் அவரை கொண்டு சென்றனர்.
அவரது காயங்களையும் உடலையும் நன்றாக துடைத்து பின்னர் வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். தற்போது ஷம்பு நலமாக உள்ளர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவர்களின் சேவை மகத்தானது என்பதனையும் அவர்களின் மனிதநேயம் மெச்சத்தக்கது என்பதையும் இதன் மூலம் அறியலாம். இன்னும் மனிதமும் மனித நேயமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் எனலாம். இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவருக்கு உதவிய டாக்டர்களையும் வாழ்த்தி வருகின்றனர்.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}