சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் 10, ஏப்ரல் 12, ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளன.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி 315 பேருந்துகளும், ஏப்ரல் 12ஆம் தேதி 290 பேருந்துகளும், ஏப்ரல் 13-ஆம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 10, 12, 13 அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 10ம் தேதி 315 பேருந்துகளும், 12ஆம் தேதி 290 பேருந்துகளும், 13-ஆம் தேதி 340 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 10ஆம் தேதி 40 பேருந்துகளும், 12ஆம் தேதி 40 பேருந்துகளும், 13ஆம் தேதி 40 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகளை இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் புதன்கிழமை அன்று 70878 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 6610 பயணிகளும் சனிக்கிழமை 4143 பயணிகளும் ஞாயிறு அன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}