ரம்ஜான், வார இறுதி நாள் கூட்ட நெரிசல்.. கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Apr 09, 2024,07:08 PM IST

சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


ஏப்ரல் 10,  ஏப்ரல் 12, ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளன.




கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி 315 பேருந்துகளும், ஏப்ரல் 12ஆம் தேதி 290 பேருந்துகளும், ஏப்ரல் 13-ஆம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 10, 12, 13 அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 10ம் தேதி 315 பேருந்துகளும், 12ஆம் தேதி 290 பேருந்துகளும், 13-ஆம் தேதி 340 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 10ஆம் தேதி 40 பேருந்துகளும், 12ஆம் தேதி 40 பேருந்துகளும், 13ஆம் தேதி 40 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகளை இயக்கிடத்  திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் புதன்கிழமை அன்று 70878 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 6610 பயணிகளும் சனிக்கிழமை 4143 பயணிகளும் ஞாயிறு அன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்