பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. நாளை சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. ரயில் சேவை ரத்து!

Feb 20, 2024,07:28 PM IST

சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை டூ நெல்லை மற்றும் நெல்லை டூ சென்னை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை முக்கியமான ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த ரயிலின் அமைப்பு, சுத்தம், கூடுதல் வேகம் என பல சிறப்புகளை உள்ளடக்கிய வந்தே பாரத் ரயில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது.




இந்நிலையில் தற்போது ஈச்சங்காடு மற்றும் மாத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.


நெல்லை டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை என்ற இரு மாக்கத்திலும் வந்தே பாரத் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் உட்பட ஆறு ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


இது தவிர தேஜஸ் விரைவு ரயில் வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒரு நாள் மட்டும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?

news

Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்