பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. நாளை சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. ரயில் சேவை ரத்து!

Feb 20, 2024,07:28 PM IST

சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை டூ நெல்லை மற்றும் நெல்லை டூ சென்னை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை முக்கியமான ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த ரயிலின் அமைப்பு, சுத்தம், கூடுதல் வேகம் என பல சிறப்புகளை உள்ளடக்கிய வந்தே பாரத் ரயில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது.




இந்நிலையில் தற்போது ஈச்சங்காடு மற்றும் மாத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.


நெல்லை டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை என்ற இரு மாக்கத்திலும் வந்தே பாரத் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் உட்பட ஆறு ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


இது தவிர தேஜஸ் விரைவு ரயில் வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒரு நாள் மட்டும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

news

அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

news

ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்