பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. நாளை சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. ரயில் சேவை ரத்து!

Feb 20, 2024,07:28 PM IST

சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை டூ நெல்லை மற்றும் நெல்லை டூ சென்னை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை முக்கியமான ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த ரயிலின் அமைப்பு, சுத்தம், கூடுதல் வேகம் என பல சிறப்புகளை உள்ளடக்கிய வந்தே பாரத் ரயில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது.




இந்நிலையில் தற்போது ஈச்சங்காடு மற்றும் மாத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.


நெல்லை டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை என்ற இரு மாக்கத்திலும் வந்தே பாரத் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் உட்பட ஆறு ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


இது தவிர தேஜஸ் விரைவு ரயில் வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒரு நாள் மட்டும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?

news

உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!

news

ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!

news

கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!

news

அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்

news

KKR அணி Playoffsக்கு செல்வது ரொம்ப கஷ்டம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்ச சம்பவம்!

news

ஆறுதல் வெற்றியில் தோனி செய்த புதிய சம்பவம்.. பல காலத்திற்கு நின்று பேசப் போகும் சாதனை!

news

அமிர்தசர் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட்டுகள்.. பாகிஸ்தான் ராணுவம் வீசியதா?

news

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்.. டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்