இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்...வாகன ஓட்டிகளே இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

Jan 31, 2025,10:52 AM IST

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்னை வருவதை முன்னிட்டு இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


முன்னாள் குடியரசுத் தலைவர் தலைவரும் பாஜகவின் மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரனுக்கு மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.




இந்த நிலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு,இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக  மாமல்லபுரத்திற்கு செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 


அதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையை முன்னிட்டு சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


 மாண்புமிகு இந்திய துணை குடியரசு தலைவர் மற்றும் உள்துறை மத்திய உள்துறை அமைச்சர்  அவர்கள் 31.1. 2025 அன்று சென்னை வருவதை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும் தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு (ஈசிஆர்) செல்லும் வாகன ஓட்டிகள் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மாற்று பாதையாக பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ஈசிஆர் வரை உள்ள சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டுக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்