சென்னை: சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் புதிதாக ஒரு யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சைதாப்பேட்டை எம்சி ராஜா மருத்துவமனைக்கு எதிரே ஒரு புதிய யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை -நந்தனம் இடையே சோதனை ரீதியாக நவம்பர் 17ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு புதிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நந்தனம் சந்திப்பிலிருந்து தி.நகர் நோக்கி வரும் வாகனங்கள், சிஐடி நகர் முதல் மெயின் ரோடு மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து வலது பக்கம் திரும்பிச் சென்று கொண்டுள்ளன. இன்று முதல் அந்த வாகனங்கள் அப்படிச் செல்லாமல், வலது பக்கம் திரும்பாமல் நேராக 50 மீட்டர் சென்று, எம்சி ராஜா மருத்துவமனை எதிரே யு டர்ன் போட்டு திரும்பிச் செல்ல வேண்டும்.
அதேபோல தற்போது சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள், ஜோன்ஸ் சாலை சந்திப்பில் உள்ள தாதண்டர் நகர் பொதுப்பணித்துறை குடியிருப்பு நோக்கி வலது புறம் திரும்பிச் செல்கின்றன. அதற்குப் பதில், இனிமேல் மேலும் 50 மீட்டர் நேராக சென்று, யு டர்ன் போட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}