முடிந்தது இழுபறி.. சத்திஸ்கர் முதல்வராகிறார்.. முன்னாள் மத்திய அமைச்சர்.. விஷ்ணு தியோ சாய்!

Dec 10, 2023,05:48 PM IST

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநில முதல்வர் பிரச்சினைக்கு ஒரு வழியாக தீர்வு கண்டு விட்டது பாஜக. பெரும் இழுபறிக்குப் பின்னர் அந்த மாநில முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியா சாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் அங்கு  சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகா பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 54 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது.




பெரும் வெற்றியைப் பெற்று விட்டாலும் கூட முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்குள் பாஜகவுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. 3 முறை முதல்வராக இருந்த மூத்த தலைவர் ரமன் சிங் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் எதிர்ப்பும் நிலவி வந்தது. இதனால் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் குழப்ப நிலை ஏற்பட்டது.


பாஜக மேலிடப் பார்வையாளர் அர்ஜூன் முண்டா தலைமையிலான உயர் மட்டக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதியில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் விஷணு தியோ சாயை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக (முதல்வராக) பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.


59 வயதாகும் விஷ்ணு தியோ சாய் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர். இவர் முன்னாள் முதல்வர் ரமன் சிங்குக்கு நெருக்கமானவர். இதன் மூலம், தான் முதல்வராக முடியாவிட்டாலும் கூட தனது ஆதரவாளரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வந்து விட்டார் ரமன் சிங்.


2006ம் ஆண்டு சத்திஸ்கர் மாநில பாஜக தலைவராக  செயல்பட்டவர் விஷ்ணு தியோ சாய். பாஜக தேசிய செயற்கு குழு உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்