பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Jan 02, 2025,06:46 PM IST

சென்னை: விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும். திமுக ஆட்சியில் மகளிருக்கு  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதல்னர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது இதில் சேருவதற்கு பதிவு செய்து கொண்ட மாணவிகளுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:




பெரியார் என்ன கனவு கண்டிருந்தாரோ, எதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அந்த எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றும் வகையில் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். புத்தாண்டு பிறந்து நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது, மிகவும் மகிழ்ச்சி. பெண்கள் உரிமை முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றவே திமுக உருவாக்கப்பட்டது. 


அரசு பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சொத்துகளில் பெண்களுக்கு சமஉரிமை அளித்தது திமுக அரசு. திமுகவின் கொள்கைகளில் பாலின சமத்துவம் மிக முக்கியமானது. பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம்.


விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும். திமுக ஆட்சியில் மகளிருக்கு  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. 


கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் 2000 பெண்களுக்கு டேலி (TALLY) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது இவ்வாறு தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்