சென்னை: சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம். திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்றைய தினம் நூலக அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். 2021ம் ஆண்டு ஆட்சிபெருப்பேற்ற உடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். கோவையில் மட்டும் 3 முறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கேன்.
இந்தாண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்த பிறகு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகள் நிலை குறித்து அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் ஆய்வு செய்ய சொல்லியிருந்தேன். அது சம்மந்தமாக ஆய்வு நடத்தி வருகிறேன். அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜி சிறப்பாக அரசு திட்டங்களை செயல்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. கோவை மக்களுக்காக திமுக ஆட்சி திட்டங்களை பார்த்து பார்த்து தீட்டி வருகிறது.
தங்களுக்கு வாக்களிக்க மனம் இல்லாதவர்களுக்கும் சேர்த்தே திமுக அரசு பணியாற்றி வருகிறது. இதனை உணர்ந்த மக்கள் திமுகவிற்கான ஆதரவை அதிகரித்து வருகின்றனர்.இந்தியாவில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 20 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உள்ளது. அனைத்து துறைகளிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலை பெற்றதற்கு, லட்சியக் கொள்கை கொண்ட அரசு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் போட்ட பதிவில், சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். கோவையில் தந்தை பெரியார் பெயரிலான நூலகம் மற்றும் அறிவியல் மையம். திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}